திங்கள் அன்று
அம்பாளை வணங்க
வேண்டும். சந்திரனுக்கு
உகந்த தெய்வம் அம்மன்தான்.
வெள்ளை நிற ஆடை
அணியலாம் அல்லது
நீங்கள் அணியும்
உடையில் சிறிய
அளவிலாவது வெள்ளை
நிறம் இருப்பது நல்லது.
நெல் தானியத்தை ஒரு
கைபிடி அளவு பறவைகளுக்கு
வைக்க வேண்டும். வலது
கை மோதிர விரலில்
முத்து மோதிரம் அணியலாம்.
பசு மாடுக்கு உணவு
தர வேண்டும். இதனால்
மன அமைதி ஏற்படும்.
புத்தி தெளிவு பெறும்
புத்தி தெளிவாக இருந்தாலே
அனைத்து காரியங்களும்
நடக்கும்.
ஸ்ரீ சந்திர
காயத்ரீ மந்திரம்
ஓம் பத்ம த்வஜாய
வித்மஹே ஹேம
ரூபாய தீமஹி! தந்தோ
ஸோம ப்ரசோதயாத்!
செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம் முருகப்பெருமானையும், துர்காதேவியையும் வணங்க வேண்டும்.
சிகப்பு ஆடை
அணியலாம். சிகப்பு
மலர்களை இறைவனுக்கு
சமர்ப்பிக்க வேண்டும்.
பவழ மோதிரம் அணிய
வேண்டும் என்ற
கட்டாயம் இல்லை.
ஆனால் கையில் செம்பு
காப்போ, மோதிரமோ அணிந்தால்
நன்மை தரும். பருப்பு
சாதம் அதாவது துவரம்
பருப்பை சாதத்தில்
கலந்து காக்கைக்கு வைக்க
வேண்டும். செவ்வாய்
பகவானுக்கு உகந்த
காயத்திரி மந்திரத்தை
9 முறை சொல்லி வர
வேண்டும். ஸ்ரீஅங்காரக
காயத்ரீ மந்திரம்
ஓம் வீர த்வஜாய
வித்மஹே: விக்ன
ஹஸ்தாய தீமஹி! தந்நோ
பௌம ப்ரசோதயாத்!
0 comments:
Post a Comment